Sunday, May 8, 2016

09-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam


09-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–26(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 34

இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க
குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும்-அடர் பைம் பூண்
சேய் பொருது அட்ட களத்து.

விளக்கம்

சோழன் சினம் கொண்ட திருமால் போன்று போரிட்ட களத்தில், காற்று கடுமையாக வீசியதால் சோலையில் இருந்த மயில் கூட்டம் பயந்து ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவது போல, போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார்கள் தம் கணவரின் உடல்களைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைந்தனர்.

பொருள்

அடர்- தகட்டுவடிவாகிய, பைம் பூண்- பசிய அணிகலத்தினையுடைய, சேய் - செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்-தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த-எதிர்த்தெழுந்த, மைந்தர் -வீரர்கள், சுடர் இலங்கு ஒளிவிளங்காநின்ற, எஃகம் - வேல்களை, எறிய - எறிதலால், சோர்ந்து உக்க - சரிந்து சிந்திய, குடர் கொண்டு - (வீரர்களின்) குடர்களைக் கவ்விக்கொண்டு, வாங்கும் - இழுக்கும், குறுநரி - குறு நரிகள், கந்துஇல் - தூணிலே (கட்டப்பட்ட), தொடர் ஓடு - சங்கிலியோடு (நின்ற), கோணாய் புரையும் - கோணாய்களை யொக்கும் எ-று.

இணரிய - இணர்: பகுதி, இன்:இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய், குறுநரி - நரியின் ஒரு வகை: 'குறுநரி பட்டற்றால்' என்பது கலி. அடர்-தகடு.

.

தெரியுமா உங்களுக்கு !   

மே 8 – 9

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள்      (Time of Remembrance and Reconciliation for Those who last Their Lives during the Second world war)

·         இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்

·         இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும்.

·         இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மே-09. அட்சய திருதியை தினம் - கவிதை

அறிவினைப் பெற்று அழகுடன் திகழ  ஆன்றோர் காட்டிய  அட்சய திருநாள்!
வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு  வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள்!
குறிக்கோள் வைத்து குவலயம் காக்க  கொடுப்பது பெருகி குவிந்திடும் தன்னால்!
தெறிக்கும் உண்மை தேசம் தோறும் திடமாய் நின்று தீரட்டும் உன்னால்!
வணிக நோக்கம் வளர்த்திடும் சிலரால் வளமாய் சுயநலம் வருவதோ திருநாள்?
புனிதம் நிறைந்து புண்ணியம் பெருக பூத்திடும் வாழ்வே புதுமைத் திருநாள்!
மனிதம் வளர்க்கும் மாபெரும் பணியே  மண்ணில் சிறந்த மங்கலத் திருநாள்!
கனிந்து செய்யும் கருணையின் தானம் காட்டும் வாழ்வே அட்சய திருநாள்!
மனதை பொன்னாய் மாற்றிட வேண்டி மண்ணில் வைத்தார் மாபெரும் திருநாள்!
கனவே வாழ்வாய் கண்டிடும் எளியோர்  கடும்பசி போக்க காட்டிய ஒருநாள்!
தினமும் உழைப்போர் தேடிடும் வாழ்வில்  தெய்வம் அருளும் தீர்க்க திருநாள்!
பணமும் பொருளும் பார்த்திட மட்டும்  பயனென வராது அட்சய திருநாள்!
                                                                                                                      நன்றி -ப.கண்ணன்சேகர்

செய்திகள்   

'நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வுகாண 70 ஆயிரம் நீதிபதிகள் தேவை- தினமணி

தேர்தல் சிறப்புக் கட்டுரை: தலைவர்களின் வெற்றியும் தோல்வியும்! – தினமணி

நாடு முழுவதும் அவசரச் சேவைகளுக்கு ஒரே அழைப்பு எண் - 112: அடுத்த ஆண்டு அமல் – தினமணி

வாக்காளர் உறுதிமொழி ஏற்பில் 10 லட்சம் பேர் பங்கேற்பு: சென்னையில் ஏற்பாடு – தி இந்து

உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்  தி இந்து

ஆஸ்திரேலியா பாராளுமன்றம் கலைப்பு ஜூலை மாதம் 2-ந் தேதி ...தினதந்தி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

20/05/2016

to

22/05/2016

 

Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi

Sri Maha Rudra Yagnam

Sri Devi Kamakshi Mandir, New Delhi

011-26867240

011-26520202

O7/05/2016  to  15/05/2016

The Stein Audotorium,   India Habitat Centre. New Delhi

11th Habitat Film Festival

May 10th | 7:00pm|Thani Ooruvan

May 15th  |4:00pm| Aruvi

May 14th | 11:00 am |Kutrame Thandanai 

 

 India Habitat Centre. New Delhi

For More details http://www.habitatfilmclub.com/favicon.ico

29/05/2016

Vasuki Auditorium, Lok kala Manch, Lodhi road .        New Delhi

Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor – Snegithi and Gyana Aalayam

Sri Hyagriva and Lok Kala Manch

9811413225 and 011- 24644421

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

No comments:

Post a Comment