Tuesday, May 31, 2016

01-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

01-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -19(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _2

 முல்லை

_பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி,

மணி நிற மா மலைமேல் தாழ்ந்து, - பணிமொழி! -

கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,

பீர் நீர்மை கொண்டன, தோள்!

பதவுரை  :-

பணிமொழி - மெல்லிய சொல்லையுடைய தோழியே, அணிநிறம் - அழகியநிறங்களைக்கொண்ட, மஞ்ஞை மயில்கள், அகவ - அன்போடு கூவியழைக்கும்படி, இரங்கி - இடித்து முழங்கி, மணி நிறம் - நீலமணி போன்ற நிறத்தினைக் கொண்ட, மா - பெரிய, மலைமேல் - மலைகளினிடத்தே, தாழ்ந்து - படிந்து, கார் நீர்மை கொண்ட - மழை காலத்தில் பெய்யுந் தன்மை மிகுதியும் வாய்ந்து காணப்பட்ட, கலி வானம் - நீர் நிரம்பிய மேகத்திரட்சியை, காண்தொறும் - யான் காணுகின்ற வேளைகளிலெல்லாம், தோள என் தோள்கள், பீர் நீர்மை - பீர்க்கம் பூவின் தன்மையை, கொண்டன - கொண்டு பொன் போன்ற பசலை பெற்று விளங்கின (என்று தலைவி தோழியினிடங் கூறினாள்)

விளக்கம்.

  "மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள்   

தெரியுமா உங்களுக்கு

இன்று   

             சர்வதேச குழந்தைகள் தினம் (International Children's Day)

உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் – 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.

 

உலக பெற்றோர் தினம் (Global Day of Parents)

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.

செய்திகள்   

பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் ரூ.2க்கு மேல் அதிரடி ...-  கூகூல்

மாநிலங்களவை மரபில் மாற்றம்: அவைத்தலைவர் ஹமீது அன்சாரி ஒப்புதல்---- தினமணி

தமிழக பள்ளிகள் இன்று திறப்பு--- தினமணி

சென்னை - மைசூரு இடையே அதிவேக ரயில்: ஜெர்மன் நிபுணர்கள் ...தினமணி

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: உடனடியாக ....தினமணி

புகையிலை எதிர்ப்பு தினம்: பிரம்மகுமாரிகள் விழிப்புணர்வு-- தினமலர்

மாநிலங்களவை தேர்தல்: நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் வேட்புமனு - கன்னட அமைப்புகள் எதிர்ப்பு---- தி இந்து

மகாராஷ்டிர ஆயுதக் கிடங்கு தீ விபத்து: விசாரணைக்கு ராணுவம் உத்தரவுநாக்பூர் அருகே ராணுவ ஆயுதக் கிடங்கில் பயங்கர தீ விபத்து--- தி இந்து

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை விற்கும் ஐஎஸ்---  தி இந்து        

'பாரபட்சம் இல்லாத விசாரணைக்கு உத்தரவிட தயாரா?'' பிரதமர் ...-- தினதந்தி      

வீடு வாடகைக்கு

7 BHK Kothi / Bungalow at NRI City,  Near Pari Chowk Omaxe Mall (Opp. JP Green , 0 KM from proposed Pari Chowk Metro Station) Greater Noida, total 2.5 floors, gated community with  24 X 7 Security,  Gym, Food Court, Children Park, tennis play area, separate badminton open court and Individual Car  Parking, Drinking Water, Five bed room with wooden wardrobe, Modular Kitchen & 2 wooden wardrobe.  lowest maintenance cost in the locality. Interested TO LET it on lease for family, Corporate and Company Lease is preferred. For further details contact Surendra: mobile no.+91-98 99 89 82 69.

நம்மை சுற்றி   ---- கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


31-5-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

31-5-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -18(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _1

 முல்லை

_தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது

மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,

செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி, - நல்லாய்! -

இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ

மயங்கி வலன் ஏரும், கார்!

பதவுரை  :-

நல்லாய் - பெண்மக்களிற் சிறந்த தலைவியே, கார் - மேகங்கள், மயங்கி - நாற்புறமும் கலந்து சூழ்ந்து, இதோ நாம் காணும் இக்காட்சியிற்பட்டு, மல்லர் - கஞ்சனாற்செலுத்தப்பட்ட மற்போர் வீரர்களை கடந்தான் - வென்ற கண்ணபிரானது, நிறம் போன்று - நீல வண்ணத்தினை நிகர்த்து, இருண்டு - பகலவனை மறைத்தலால் இருள் பரவும்படி, எழுந்து - வெளிப்பட்டு, செல்வம் - வளப்பமிக்க, கடம்பு - கடப்பமலர் மாலையினை, அமர்ந்தான் - விரும்பி மேற்கொண்ட முருகப்பிரானது, வேல் - வேற்படையினைப் போல, மின்னி - மின்னலைச் செய்து, இயங்கு - இடம் பெயர்ந்து செல்லக்கூடிய எயில் - பொன், வெள்ளி, இரும்பு என்ற மூவித உலோகங்களால் லாக்கப்பட்ட பொற்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இருப்புக் கோட்டை என்ற மதில்களை, எய்தவன் - தனது அம்பினாற் பொடியாக்கிய சிவபிரானது, தார் - மாலையாகிய கொன்றைப் பூக்கள், பூப்ப - மலரும்படியாக, வலன் - வலமாகச் சுழன்று, ஏரும் - எழா நிற்கின்றன .

விளக்கம்.

  "தலைவியே! மலர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.           

தெரியுமா உங்களுக்கு

உலகப்புகையிலை ஒழிப்பு தினம் (World No – Tobacco Day)

 

புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒரு போதைப்பொருளாகும். ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31  கொண்டாடப்படுகிறது.

செய்திகள்   

ஆழ்வார்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 ஐம்பொன் சாமி ... தினமணி

சென்னை தனியார் பள்ளி வாகனங்களில் 3வது நாளாக அமைச்சர் ஆய்வு.. தினமணி

சித்த மருத்துவம், ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு ஜூன் 6,7-இல் ஆரம்ப ...தினமணி

விஷப் பரிசோதனை வேண்டாமே! - உலக புகையிலை எதிர்ப்பு நாள் ...-தி இந்து

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல்-- தி இந்து

ஜூன் 29-ல்எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தி இந்து

இந்தியாவும், பாகிஸ்தானும் போரை விரும்பக்கூடாது ...-- தினதந்தி

வீடு வாடகைக்கு

7 BHK Kothi / Bungalow at NRI City,  Near Pari Chowk Omaxe Mall (Opp. JP Green , 0 KM from proposed Pari Chowk Metro Station) Greater Noida, total 2.5 floors, gated community with  24 X 7 Security,  Gym, Food Court, Children Park, tennis play area, separate badminton open court and Individual Car  Parking, Drinking Water, Five bed room with wooden wardrobe, Modular Kitchen & 2 wooden wardrobe.  lowest maintenance cost in the locality. Interested TO LET it on lease for family, Corporate and Company Lease is preferred. For further details contact Surendra: mobile no.+91-98 99 89 82 69.

நம்மை சுற்றி   ---- கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


Sunday, May 29, 2016

30-5-2016 “News Letter ” from Avvai Tamil Sangam



 

30-5-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -17(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளை மிக முக்கியமான தினம்!!!

ஐந்திணை ஐம்பது- முன்னுரை

 இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப்(செய்யுள்)  பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது

சிறப்புப் பாயிரம்

பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய,
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்,
செந்தமிழ் சேராதவர்

பதவுரை  :-

வண்மை - மெய்யம்மையான, புள்ளி - இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள, மாறன் பொறையன் - மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், பண்பு - மக்கட் பண்புகளை, உள்ளி நின்ற - ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, பெரியார் - உயர்ந்தோராகிய உலகமக்கள், பயன் - நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, தெரிய - நன்குணரும்படியாக, புணர்த்து - அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, யாத்த - செய்யுள் வடிவமாக இயற்றிய, ஐந்திணை ஐம்பதும் - முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், ஆர்வத்தின் - விருப்பத்துடன், ஓதாதார் - படித்து அறியாத மக்கள், செந்தமிழ் - செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, சேராதவர்

விரிவுரை.

 "ஆயிரமுகத்தான் அகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே," என்றாராகலின், முதற்கட் பாயிரங் கூறப்பட்டதென்க. "மாறன் பொறையன்," என்றதனால் ஆக்கியோன் பெயரும், "ஐந்திணை," என்றதனால் அகப்பொருணூலாகிய வழியும், அகமாகியநுதலியபொருளும், "செந்தமிழ்" என்றதனால் நூல்வழங்கவேண்டிய தமிழ்நாட்டெல்லையும், ''ஐந்திணையைம்பது'' என்றதனால் நூற்பெயரும், ''யாத்த'' என்றதனால் செய்யுள் வடிவமாகிய நூல் யாப்பும், ''பண்புள்ளிநின்ற பெரியார்,'' என்றதனால் கேட்போரும், ''பயன்,'' என்றதனால் நூற்பயனும் பெறப்பட்டமை காண்க. என்னை ''ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற் பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோடாயெண் பொருளும், வாய்ப்பக் காட்டல் பாயிரத்தியல்பே,'' என்றா ராகலி னென்க. புள்ளியிடுதல் - ஐந்தொகை முதலிய பெருங்கணக்குகளிட்டுப் பார்த்தல். ''மாறன் பொறையன்'' என்பது இந்நூலாசிரியருக்குப் பாண்டிமன்னனா லளிக்கப்பட்ட பட்டப் பெயராம். ''வண்புள்ளி'' என்ற அடைமொழிகளால் இவர் பாண்டி நாட்டு அரசியலிற் பண வரவு செலவுக்குரிய பெருநிலையொன்றிற் பெரும் பெயர் பெற்ற பெரியாராவரெனக் கருதக் கிடக்கின்றது. புள்ளி - பணத்தொகை. செந்தமிழ் + சேராதவர் = செந்தமிழ் சேராதவர் ; இரண்டன் தொகை யாகலின், இயல்பாயிற்றென்க. புணர்த்து + யாத்த = புணர்த்தியாத்த : யகரம் வரக் குறள் உகரம் இகரமாகத் திரியலாயிற்று. இப் பாயிரம் மற்றச் செய்யுட்களைப் போல், பழைய பொழிப்புரையினைக் கொண்டிருக்கவில்லை.  

தெரியுமா உங்களுக்கு

1913 - முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.

1942 - இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.

1966 - முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1972 - இஸ்ரேலின் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1987 - கோவா தனி மாநிலமாகியது.

1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

செய்திகள்   

நேதாஜி தொடர்பில் ஆவணம்! மத்திய அரசு வெளியிட்டது---- கூகூல்

அமெரிக்க உயிரியல் பூங்காவில் பயங்கரம்:கூண்டுக்குள் விழுந்த ... தினமணி

700 அகதிகள் கடலில் மூழ்கி பலி --- தி இந்து

டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியும்: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி தகவல் ---தி இந்து  

தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு-  தின்மணி

போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் ஓராண்டு சிறை, ரூ.10,000 வரை அபராதம் -- தி இந்து

அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக வானிலை அறிவிப்பு--- தி இந்து

புகையிலை கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம்: சென்னையில் நாளை நடக்கிறது--- தி இந்து

வீடு வாடகைக்கு

7 BHK Kothi / Bungalow at NRI City,  Near Pari Chowk Omaxe Mall (Opp. JP Green , 0 KM from proposed Pari Chowk Metro Station) Greater Noida, total 2.5 floors, gated community with  24 X 7 Security,  Gym, Food Court, Children Park, tennis play area, separate badminton open court and Individual Car  Parking, Drinking Water, Five bed room with wooden wardrobe, Modular Kitchen & 2 wooden wardrobe.  lowest maintenance cost in the locality. Interested TO LET it on lease for family, Corporate and Company Lease is preferred. For further details contact Surendra: mobile no.+91-98 99 89 82 69.

நம்மை சுற்றி   ---- கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

Thursday, May 26, 2016

27-5-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

 

27-5-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -14(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- முன்னுரை

 இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப்(செய்யுள்)  பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.                       

பாயிரச் செய்யுள் ஒன்று நூலின் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது.

இதில் உள்ள ஐந்திணை வரிசை முறை 'மாயோன் மேய காடுறை உலகமும்' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திர அமைப்பை ஒத்துள்ளது.  

இச் சூத்திரத்துள் காணப்பெறாதபாலை, நால்வகை நிலங்களுக்கும் பொதுவாதலாலும், உரிப்பொருளில் பிரிதல் ஒழுக்கத்துக்கு உரித்தாதலாலும், அதனையும்உடன் கொண்டு ஐந்திணையாகக் கூறுதலே மரபு. பாலைத்திணையை ஈற்றயலாக வைத்து, இருத்தலுக்குரிய முல்லையில் தொடங்கி, இரங்கலுக்கு உரிய நெய்தலை ஈற்றில் அமைத்துவைத்துள்ள வரிசை முறை சிந்தித்தற்குரியது.

இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையவராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும். பொறையனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், மாறன் என்பது இவர் தந்தையார் பெயர் என்றும் கொள்ள இடமுண்டு. இந் நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதலாம். பாயிரப் பாடலில் வரும் 'வண் புள்ளி மாறன் பொறையன்' என்ற தொடரைக் கொண்டு, இவர் அரசாங்க வரவு செலவுத் தொடர்புடைய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என்பர் சிலர். 'வண் புள்ளி' என்பதை வளப்பமான புள்ளி என்னும் ஊர் என்றும் கொள்ள இடமுண்டு.

திருக்குறள் முதலிய சில கீழ்க்கணக்கு நூல்களில் பயின்றுள்ள சொற் பொருள் மரபுகள் சிலஇந் நூலகத்தும் உள்ளன  , நாளை தொடறும்…..

தெரியுமா உங்களுக்கு - நாளை கடைசி தினம்

·         Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi:

·         PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR

·         Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are  applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi

·         Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi.

·         மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form

செய்திகள்   

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்     

 முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு இன்று ஆய்வு

உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்

சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற தனி நிறுவனம் தொடக்கம்-  தி இந்து

 நான் பிரதமர் இல்லை; நாட்டின் பிரதான சேவகன்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு- தி இந்து

தாவூதுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு சர்வதேச நிர்ப்பந்தம் தேவை: ராஜ்நாத் சிங்- தி இந்து

2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரேஷ் பிரபு – தின மலர்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்களை  தின தந்தி

மணமகன்/மணமகள் தேவை

செல்வன்R. ராமன் – BE, MBA,  பிரஹசர்னம், ஸ்ரீவத்ச கோத்ரம், சதயம். பிறந்த தேதி 18 May 71 . தென் காசி யில் பிறந்து வளர்ந்தவர். தற்பொழுது  Abhdhabi யில் பணி புரிகிறார், பெற்றோர்கள் தென்காசியில் உள்ளனர். ஒரு சிறிய தங்கை – கல்யாணமாகிவிட்டது. நல்ல சம்பளம். தொடர்புக்கு clo புது தில்லி திரு  ரவி-  9871508880 மற்றும்  tsiravi@yahoo.co.in , தென்காசி 04633-226199

கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

27/05/2016

ஸ்ரீ ராம் மந்திர்     ( Sri Ram Mandir-Dwarka- Sector 7..New Delhi) at 06.30PM onwards

Bhajan Sandhya- By       UDAYALUR BRAHMA SRI    DR. KALYANARAMA BHAGAWATHAR                          

Jointly by                     Sri Ram Mandhir                      and                         Dwarakalaya

9810116465

29/05/2016

Vasuki Auditorium,      Lok kala Manch, Lodhi road .   

New Delhi

Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor Snegithi and Gyana Aalayam)

Sri Hyagriva and Lok Kala Manch

9811413225 and 011- 24644421

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com