Monday, February 27, 2017

28-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

28-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

   

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி 16 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -28

வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்

இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி

செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர்

உமிக்குத்திக் கைவருந்து வார்.

விளக்கம்

வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர்.

பொருள்

வெல்வது - சொல்வென்றியை, வேண்டி - விரும்பி, வெகுண்டு உரைக்கும் - (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் - தவம் இல்லாதவனும், (தீயோனும்,) இல்லது - (தனக்குக்) கிடைத்தற்கரிய பொருளை, காமுற்று - விரும்பி, இருப்பானும் - இருக்கின்றவனும்; கல்வி - பிறன் கற்ற கல்விப் பொருளில், செவிக் குற்றம் - செவியினால் குற்றத்தை, பார்த்திருப்பானும் - ஆராய்ந்து பார்க்கின்றவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், உமி குத்தி - உமியைக் குத்தி, கை வருந்துவார் - கைவருந்துவோரை ஒப்பர்;

தெரியமா உங்களுக்கு  !....

தேசிய அறிவியல் நாள்  

·         தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

·         தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

·         சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது. மேலும் படிக்க

 

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத்

·         டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் Dr. Rajendra Prasad 3 டிசம்பர் 1884 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர்.

·         1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர். மேலும் படிக்க

 

தி. ஜானகிராமன்

·          தி. ஜானகிராமன்  (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 . திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.

·          தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். மேலும் படிக்க

செய்திகள் 

நெடுவாசல் போராட்டத்துக்கு 100 கிராம மக்கள் ஆதரவு: ஒரே நாளில் 10,000 பேர் திரண்டனர்   - தி இந்து

பிரதமரிடம் 41 பக்க கோரிக்கை மனு எடப்பாடி பழனிசாமி வழங்கினார் - தினத் தந்தி

'நீட்' அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் மாணவர் சேர்க்கை -  தி இந்து      

இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: நெடுவாசலில் போராட்டத்தை ...தினத் தந்தி

அமெரிக்காவின் பாதுகாப்பு செலவினங்களில் 10 சதவீதம் அதிகரிக்க ...பிபிசி

ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் பட்டியல்| சிறந்த படம்: மூன் லைட் -  தி இந்து

 விராட்கோலிக்கு சிறந்த கேப்டன் விருது- மாலை மலர்           

கடைசி கட்டத்தில் மெஸ்ஸி கோல்: பார்சிலோனா வெற்றிதினகரன்

வீடு வாடகைக்கு 

LIG  flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 /  08527498136

Email id:  aruna_clt@yahoo.co.in

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Sunday, February 26, 2017

27-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

27-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி 15 (சனி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -27

உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்

பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச்

சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந்

தூஉய மென்பார் தொழில்.

விளக்கம்

குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.

பொருள்

உண்பொழுது - உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி - குளித்து, உண்டலும் - உண்ணுதலும்; என் பெறினும் - (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் - ஒரு பக்கம், பற்றி - சார்ந்து, சொல்லா விடுதலும் - பொய்க்கரி சொல்லாமலிருத்தலும்; தோல் வற்றி - (உணவின்மையால்) உடம்பு இளைத்து, சாயினும் - அழிவதாயிருந்தாலும், சான்று ஆண்மை - பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுதல், குன்றாமை - குறையாமையும்; இ மூன்றும் இவை மூன்றும், தூஉயம் - (மன மொழி மெய்களால்) குற்றமற்றவர்களாயிருக்கின்றோம், என்பார் - என்று கருதுவோர் தொழில் - செயல்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

குசுமாகரசு (27 பிப்பிரவரி 1912 10 மார்ச்சு 1999),

·         விட்டுணு வாமன சிருவாதுகர் என்னும் எழுத்தாளர் குசுமாகரசு (குஷ்மாகரஜ்) என்னும் புனைப்பெயரில் எழுதிவந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதினப்படைப்பாளி, நாடக ஆசிரியர். இவர் மாந்தநேயராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அறத்துக்காகவும் பாடுபட்டவராகவும் அறியப்படுகின்றார்.

·         இவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 27, மராட்டி மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க

சந்திரசேகர ஆசாத் (23 சூலை 190627 பெப்ரவரி 1931)

·         சந்திரசேகர ஆசாத் என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர்.

·         இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர்.

·         ஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.. மேலும் படிக்க

செய்திகள் 

நிதிமுறைகேடு செய்பவர்கள் தங்கிட பிரிட்டனின் தாராளவாத ஜனநாயகம் இடம் கொடுக்கிறது: லண்டனில் அருண் ஜேட்லி பேச்சு  - தி இந்து

இனவெறி தாக்குதலை தடுக்க என்ன செய்ய போகிறார்கள்? - அமெரிக்க ... - தி இந்து

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ... - தினத் தந்தி

இந்தியாவிலேயே பணக்கார நகரம் மும்பைதான் - தினமணி  

ஜெ.தீபாவின் வீட்டை ஆதரவாளர்கள் முற்றுகை பெண் தீக்குளிக்க ...தினத் தந்தி

பத்திரிகையாளர் விருந்து புறக்கணிக்க டிரம்ப் முடிவு - தினமலர்        

நடிகர் தவக்களை மாரடைப்பால் காலமானார் - தி இந்து

ஒரு தோல்வியினால் தொடரையே இழந்து விட்டோம் என்று அர்த்தமல்ல: சச்சின் டெண்டுல்கர்  -  தினமணி

வீடு வாடகைக்கு 

LIG  flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 /  08527498136

Email id:  aruna_clt@yahoo.co.in

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Thursday, February 23, 2017

24-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

24-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி –12 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -26

ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக்

கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற்

சீல மினிதுடைய வாசானும் இம்மூவர்

ஞால மெனப்படு வார்.

விளக்கம்

நல்ல விருந்தினனும், உயிரைக் கொல்லாது வாழ்பவனும், ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் உயர்ந்தோர் ஆவார்.

பொருள்

ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் - அறியவல்ல, விருந்தினனும் - அதிதியும்; ஆர் உயிரை - அருமையாகிய உயிரை, கொல்வது - (ஒருவன்) கொல்லுந் தொழிலை, இடை நீக்கி - கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி, வாழ்வானும் - வாழ்கின்றவனும்; வல்லிதின் - (மனத்தின்) உறுதியினால், இனிது சீலம் - (உயிர்க்கு) நன்மையைத் தருவதாகிய ஒழுக்கத்தை, உடைய ஆசானும் - உடைய ஆசிரியனும்; இ மூவர் ஆகிய இம் மூவரும், ஞாலம் எனப்படுவார் - உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்;

தெரியமா உங்களுக்கு  !....

அனந்து பை      (செப்டம்பர் 17, 1929, இறப்பு பெப்ரவரி 24, 2011)

·         இந்தியர்களால் பாசமாக பை மாமா (Uncle Pai) என அழைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் படைப்பாளி அனந்து பை ஆவார்.

·         தனது கார்டூன் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பை. இவரது வாழ்வு, இந்தியாவின் எதிர்காலத் தலைமுறைக்கு நாட்டின் பழம்பெருமையை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் கழிந்தது. அதே நேரம் அறிவியலின் தாக்கமும், நவீனக் கல்வியின் ஊக்கமும் பையின் சித்திரக் கதைகளுக்கு புது மெருகும் புத்திளமையும் அளித்தன. குழந்தைகளைப் பொருத்த வரை, இவர் மழலை இலக்கியம் படைத்ததால் 'பை மாமா' ஆனார்.மேலும் படிக்க

ஸ்டீவ் ஜொப்ஸ்  (பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011)

·         ஸ்டீவ் ஜொப்ஸ்  (Steve Jobs,) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார்.

·         இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

·         கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.

·         புள்ளிகளை இணைப்பது: நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி '(அச்சுக் கலை) கொண்டது. மேலும் படிக்க

செய்திகள் 

ரயில்வே திட்டப் பணிகளில் இழுபறி முடிவுக்கு வருமா?- தமிழக முதல்வர் பழனிசாமிக்கு ரயில்வே அமைச்சர் கடிதம் - தி இந்து

அதிமுக தலைமை பொறுப்பேற்க டிடிவி.தினகரனுக்கு தகுதி இல்லை ...- தினகரன்

பூமியை போன்ற 7 கிரகங்கள் நாசா கண்டுபிடிப்புதினமணி

குஜராத் கழுதைகளைக் கண்டு பயப்படுகிறார் அகிலேஷ் யாதவ்: நரேந்திர மோடி கிண்டல்  - தி இந்து

குடும்ப அரசியல் கூட்டணி சாதிக்குமா, சறுக்குமா?- தி இந்து

பாலியல் குற்றங்களை தடுக்க கேரள அரசு அதிரடி திட்டம்தினமலர்

170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கடந்தது ரிலையன்ஸ் ...- தி இந்து

நடப்பு நிதியாண்டுக்கான கடைசி தங்க பத்திரம் 27ம் தேதி வெளியீடு ... -  தினகரன்

புனே டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு: ஆஸி.யை அடக்கினார் ... -  தினகரன்

பாட்மிண்டன் தரவரிசை: சமீர் 11 இடங்கள் முன்னேற்றம் -  தினமணி

வீடு வாடகைக்கு 

LIG  flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 /  08527498136

Email id:  aruna_clt@yahoo.co.in

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

23.2.17

 

Sri Devi Kamakshi Mandir, New Delhi

Sri Bala Periawal Jayanthi

Jayanthi Celebrations of His Holiness Jagadguru Pujyasri Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji

22.2.17

4.00 PM

ACCIDHRA ASWAMEDA PARAYANAM

23.2.17

8.30 A.M Onwards

Mahanyasa Ekadasa Rudhra Japa Abishekam,

Trisathi Archanai,Harathi

6.00 P.M onwards

Veda, Upanishad Parayanam

Paduka Puja

7.15 P.M.

Prakara Utsavam, Harathi

Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji

 

 

24.2.17

8.30 PM onwards

 

Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi

Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert"

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

24.2.17

2.30 PM onwards

 

Sri Adi Sankara Temple, A-52 Noida Dadri Road, Opp : HP Petrol Station, Sector 42, Noida'

Maha Shivrathri & Maha Pradosham

'Mahanyasa Rudrabhishekam with Krama Archana & Pushpanjali'

Sri Vishnu Sahasranama Satsangam

Sector 34, Noida

V Badrinarayanan                   9312590372

Suresh Sitaraman                    9811933299

K Rajasekar                             9868102051

V Jayaraman                           9871526767

S Muralidharan                       9811008805

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com