Thursday, February 9, 2017

10-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

10-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை 28 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -18

ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு

இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை

உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும்

கள்வரின் அஞ்சப்படும்.      

விளக்கம்

உறுதியாக வரும் மூப்பு, நண்பரின் பிரிவு, உடம்பினை உருக்குகின்ற தீராத நோய், இம்மூன்றுக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

பொருள்

ஒருதலையான் - உறுதியாக, வந்துறூஉம் - வந்தடையும், மூப்பும் - கிழப்பருவமும்; புணர்ந்தார்க்கு - நட்பினருக்கு, இருதலையும் - (பிரியப்பட்டவரும் பிரிந்தவரும் ஆகிய) இரண்டிடத்தும், இன்னாப் பிரிவும் - துன்பத்தைத் தருகின்ற பிரிவும்; உருவினை - உடம்பை, உள் - உள்ளிடத்துள்ள தசை முதலியவற்றை, உருக்கி - கரையச் செய்து, தின்னும் - வருத்துகின்ற, பெரும் பிணியும் - (மருந்து முதலியவற்றால்) தீராத நோயும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், கள்வரின் - கள்வர்க்கு அஞ்சுவது போல், அஞ்சப்படும் - பயப்படப்படும்;

தெரியமா உங்களுக்கு  !....

1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது

·          ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.

·          இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புதுதில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

·         இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது.

·          1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது. மேலும் படிக்க

செய்திகள் 

ஓபிஎஸ், சசிகலா சந்திப்புக்குப் பிறகு ஜனாதிபதி, பிரதமருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினார் - தி இந்து

மன்மோகன் சிங் குறித்த மோடியின் விமர்சனம் சரியானதுதான் ...- தினமணி

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலர், டிஜிபி ...- தி இந்து

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ...- தினத் தந்தி

அமெரிக்கா- சீனா இடையே ஆக்கப்பூர்வமான உறவு தேவை: சீன ... -  தினமணி

இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தல் : மல்லையாவை ... - தினகரன்

சட்டமன்றத்தில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடப்பதை உறுதி செய்ய ... -  தினத் தந்தி

டிரம்ப் பயணத்தடை மீதான தடையை விலக்க மேல் நீதிமன்றம் மறுப்பு -  பிபிசி

விஜய்யின் நிதான, கோலியின் தங்குதடையற்ற சதங்களுடன் இந்தியா 356 ரன்கள் குவிப்பு -  தி இந்து

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

11.2.17

3.00  PM  onwards

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

பிப்ரவரி மாத இலக்கியச் சந்திப்பு

பேச்சாளர்:

பாரதியார் எழுத்துகளில் நாடும் தேசமும், 30நி.

முனைவர். கோவி. இராஜகோபால், இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை, நவீன இந்திய மொழிகள் மையம்,

தில்லிப் பல்கலைக்கழகம்,

தில்லி.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழ் தேசியத்தின் எதிரொலி?, 30நி.

முனைவர் ஞானகுருநாதன்,

முதன்மையர், பரந்துபட்ட கலைகளுக்கான மையம்,

அபேஜய் ஸ்டியா பல்கலைக்கழகம்,

ஹரியானா.

கலந்துரையாடல் - 30 நி

இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!

தில்லிகை

தில்லி இலக்கியவட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்

dhilligai@gmail.com

www.facebook.com/dhilligai1

www.dhilligai.blogspot.in

 

 

 

11.2.17

6.30 PM  onwards

Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi

Bharatanatyam recital by Ms. Sapna Attavar

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

 

12.2.17

9.00 AM to 1.00 PM  

FREE Medical Camp

 

12.2.17

&

19.2.17

 

Lecture Hall, IIC Annexe building, Max Mueller Marg, New

 

Delhi

 

Ramakrishnapuram South Indian Society (Regd.) in association with

India International

Centre

 

 

18.2.17

&

19.2.17

 

Dr. Ambedkar Auditorium,  AP & Telangana Bhavan,  New Delhi

Sri Ramanujar's 1000th year Jeyanthi 

Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History.

Sri Ramanuja Kainkarya Sabha

in association with

Delhi Telugu Academy

9868248831

9968689305

Details Click Here

Invitation 1

Invitation 2

 

 

19.2.17

6.00 PM  onwards

Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi

Carnatic Flute Recital"  by

Delhi Sri P.Nagarajan (Disciple of Dr.Prapancham Sitaram

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

 

24.2.17

8.30 PM onwards

 

Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi

Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert"

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment