Thursday, June 16, 2016

17-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

 

17-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -03(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _9

 முல்லை

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது

 


 

நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
கற்புத் தாள் வீழ்த்து, கவுள் மிசைக் கை ஊன்றி,
நிற்பாள் நிலை உணர்கம் யாம்.

. பதவுரை  :-

நூல்நவின்ற - கலைப்பயிற்சி மிக்க, பாக - தேர்ப்பாகனே ! தேன் நவின்ற - தேன்கூடுகள் மிகுந்த, கானம் - காட்டினது, எழில் நோக்கி - கார்ப் பெயலான் மிகுந்த அழகினைப் பார்ப்பதுபோல் என் வரவினை நோக்கிக் கொண்டு, தான் நவின்ற - தான் சிறு பருவத்திலிருந்தே பழகி மேற்கொண்ட, கற்புத் தாள் - கற்பாகிய அடைப்புக் கருவியினை, வீழ்த்து - மனத்தகத்தே சேர்த்து உயிரினைக் காப்பாற்றி, கவுள்மிசை - மோவாய் மீதே, கையூன்றி - தனது இடக்கையினைச் சேர்த்து வைத்து, நிற்பாள் - நிற்பவளாகிய தலைவியினது, நிலை - நிலைமையை, யாம் - நாம், உணர்கம் - சென்று உணர்வாம் ; (அதற்குத் தகுதியாக,) தேர் - நமது தேர், நொவ்விது ஆ - விரைவாக, சென்றீக - செல்வதாக (என்று தலைவன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான்.)

விளக்கம்:-
கலை நூல்களை நன்றாகக் கற்றறிந்த தேர்ப்பாகனே! வண்டுகள் இசைபாடும் காட்டின் அழகினைப் பார்த்து, தான் நாள்தோறும் போற்றி வந்த கற்பு நெறியினைக் காப்பாற்றி, கன்னத்தின் மீது இடக்கையினை ஊன்றி, வழிமேல் விழி வைத்துக் காத்து நிற்பவளாகிய என் தலைவியின் நிலையை நாம் சென்று காண்போம். அதற்குத் தகுதியாக நமது தேர் விரைவாகச் செல்லட்டும்" என்று தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான்.

இரத்த தான தினக் கவிதை

 நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட
      நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்!
அதிகாலை பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட
      அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்!
விதியினை மாற்றியே வீழ்வதை தடுத்திட
      வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்!
நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி காண்போரும்
      நிச்சயமாய் குருதியால் நலவாழ்வு வந்திடும்!
உடல்முழுக்க பிராணத்தை உந்தும்நிலை செய்திட
      உதவுகிற பெரும்பணியே ஓடுகின்ற ரத்தமே!
முடக்கிடும் கிருமிகளை முற்றிலும் அகற்றிட
      முதன்மை சேவகனாய் முயன்றிடும் ரத்தமே!
திடமென இருதய தெளிவான ஓட்டத்தை
      தினந்தோறும் தருவதும் தேகத்தில் ரத்தமே!
மடமை செய்கையாய் மாபெரும் தீமைகள்
      மானுடர் செய்வதால் மாசாகும் ரத்தமே!
கொடுத்திட குறையாது குருதியே உடலிலே
      கொடூர போதையை குடியாமல் இருந்திடு!
மிடுக்கென மேனியை மிளிர்த்திடும் குருதியை
      மெய்த்தூய்மை செய்துநீ மேலாக வைத்திடு!
அடுத்தவர் தேவைக்கு ஆரோக்கிய ரத்தமதை
      அன்பினைக் காட்டிட அறமென கொடுத்திடு!
கொடுத்திடும் தானத்தில் குருதியே சிறப்பென
      குவலயம் வாழ்த்திடும் குதுகலம் கண்டிடு!

                                       நன்றி- திரு.  சேகர்


செய்திகள்   

உ.பி. சட்டப் பேரவை தேர்தலில் ஷீலா தீட்சித் முதல்வர் வேட்பாளர்?தினகரன்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த மாட்டோம்: கேரள ...தி இந்து

இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர் தினமலர்

யூரோ கால்பந்து லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி அபாரம் 7 தமிழ்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க ...4தமிழ்மீடியா

 

விற்பனைக்கு

FOR  IMMEDIATE SALE - 2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA

Property Description : Newly constructed  beautifully maintained builder floor apartment with area 1010 sqm & Camera Installed at all floors for Security... Just 4 km from City Center Metro Station.Semi Modular Fitting in Kitchen. Good quality wood work....Ownership will be free hold. தொடர்புக்கு- Mr Sri ram- 8826567774

 கும்பாபிஷேகம்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

 

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment