Monday, June 6, 2016

07-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam


 

07-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -25(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _5

 முல்லை

_பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது

கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்

கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,

வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,

துளி கலந்து வீழ்தரும், கண்

பதவுரை  :-

(என்னருமைத் தலைவியே !) கண் - நின் கண்கள், கோடு - சிகரங்களால், உயர் தோற்றம் - சிறந்த காட்சியினைக் கொண்ட, மலைமேல் - மலைகளின் மீதே, இரும் கொண்மூ - பெரும் மேகக் கூட்டங்கள், கூடி - திரண்டு, நிரந்து - கலந்து, தலை பிணங்கி - ஒன்றோடொன்று மாறுபட்டு, ஓடி - வான் வெளியே சென்று, வளிகலந்து - காற்றோடு கூடி, வந்து - கீழிறங்கி, உறைக்கும் - பெய்யும் படியான, வானம் - ஆகாயத்தினை, காண் தோறும் - காணும் வேளைகளி லெல்லாம், துளி கலந்து - கண்ணீர்த் துளிகளை மிகப் பெற்று, வீழ்தரும் - பெய்விக்கின்றன.

 

(ப-ரை.) குவடுகளுயர்ந்த தோற்றத்தையுடைய மலைகள்மேற் பெரு முகில்கள் திரண்டு மிடைந்து, ஒன்றோடொன்று பிணங்கி யோடிக் காற்றோடு கலந்து பெய்கின்ற விசும்பு காணுந்தோறும் துளி கலந்து பெய்யாநின்றன நின் கண்கள்..

விளக்கம்.

என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்

தெரியுமா உங்களுக்கு- தமிழ்த் தொண்டு

திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் - Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணினித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015 ஆகிய 4  நான்கு ஆண்டுகளாக வழங்கிவந்துள்ளது. இவ்வாண்டு முதல் முதல் இவ்விருதுகளின் விதிகளில் சில மாற்றங்களும் புதிய விருதுச் சேர்க்கையும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறாகத் தமிழ்ப்பேராய விருதுகள் 2016 முதல் 14பேருக்கு 22 இலட்சம் ரூபாய் தொகையுடைய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படவிருக்கும் விருதுகளும் தொகையும் விதிமுறைகளும் விளம்பரக் குறிப்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளும் நூல்களும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 30.06.2016.

   பரிந்துரைகளையும் நூல்களையும் அனுப்பவேண்டிய முகவரி:

துறைத்தலைவர், தமிழ்ப்பேராயம்,

மைய நூலகக் கட்டடம், நான்காம் தளம்,

SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203.

தொலைபேசி: 044 27417375. மின்னஞ்சல்: tamilperayam@srmuniv.ac.in 

செய்திகள்   

இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம்…. தி இந்து

மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்: புதுவை முதல்வர் ... தினத் தந்தி

மோசமான வானிலை: சென்னைக்கு வந்த மூன்று விமானங்கள் ... ...தினமணி

கைப்பற்றப்பட்ட சிலைகளை பரிசோதனை செய்ய மத்திய தொல்லியல் ... ...- தின மணி

புதுக்கோட்டையில் சோகம்.. ஓய்வு பெற்ற சர்வேயர், மனைவி, மகன் ... --- கூகூல் 

ஆசிய சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலிய ...  தினத் தந்தி

டாப் 10ல் போபண்ணா: ரியோ ஒலிம்பிக்சுக்கு தகுதி-----    தினமணி

 உலக சுற்றுச்சூழல்

உலக சுற்றுச்சூழல் தினக் கவிதை

நிர்வாண மானுடர் நிறைந்த காலத்தில்
       நிரம்பியே செழித்தன நிகரிலா வனவளம்!
பேர்பெற்ற நாகரீகம்  பெருமையெனக் கண்டதால்
       பேதலிக்கும் நிர்வாண பிழையான நிலவளம்!
ஊர்சுற்றி நாடோடி உண்மையாய் வணங்கிட
       ஊணமே காணாது உயர்ந்தது மண்வளம்!
வேர்வையை சிந்திட  வேளாண்மை செய்தவன்
       வித்திட்ட உழைப்பினால் வாழுது விளைநிலம்!
நிலத்தடி நீர்வளம்  நிலைத்திட செய்வதே
        நித்திலம் செழித்திங்கே நிம்மதி கிடைத்திடும்!
உலகத்தின் வேர்களாய் ஓடிய நீர்த்தேக்கம்
        ஊரென மாறினால் உயிரெலாம் அழிந்திடும்!
பலகையில் எழுதிடும் பாலகன் மனதிலும்
        பசுமையை உணர்த்திட படிப்பினை வந்திடும்!
குலமெலாம் இயற்கையை கொண்டாடும் பன்பாடே
        குவலயம் சிறந்திட கொள்கையை கண்டிடும்!
சந்ததி வாழ்வினை சற்றேனும் நினைப்பதால்
        சரியாத சூழலே சத்தியமாய் வந்திடும்!
வந்தமழை சேமிக்க வசதியை செய்தாலே
        வையத்தில் வாட்டிய வறட்சியும் நீங்கிடும்!
சிந்தனை செய்திடு சீற்றங்கள் வருவதும்
        சீரழித்த இயற்கையென சிந்தையே கண்டிடும்!
தந்தியின் வேகமாய் தரணியைக் காத்திட

தந்திடும் விழிப்பதுவே தடுத்திட உதவிடும்!

                                 நன்றி- திரு. சேகர்

 

 

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment