Monday, April 25, 2016

26-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

26-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–13(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 25

மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்

குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு

வானத் துடைப்பன போன்ற புனனாடன்

மேவாரை யட்ட களத்து.

விளக்கம்

சோழ மன்னன் பகைவரை அழித்த போர்க்களத்தில் மலைகள் நடுங்க மலைகள் வந்து மோதுவன போல யானைகள் யானைகளுடன் மோதின. அப்போது யானைகள் மீது கட்டப்பட்டிருந்த கொடிகள், வானத்தில் பட்ட இரத்தக் கறைகளைத் துடைப்பன போல் நிமிர்ந்து பறந்து ஆடின.

பொருள்

மேவாரை - பகைவரை

புனல் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், மேவாரை-பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மலை கலங்க - மலைகள் கலங்க, பாயும் - பாயா நின்ற, மலைபோல் - மலைகள்போல, நிலைகொள்ளா - நிலை கொண்டு, குஞ்சரம் பாய - யானைகள் பாய்தலால், கொடி - (அவற்றின் மிசை கட்டப்பெற்ற) கொடிகள், எழுந்து மேல் எழுந்து, பொங்குபு - விளங்கா நின்று, வானம் - வானத்தை, துடைப்பன போன்ற துடைப்பனவற்றை யொத்திருந்தன .

தெரியுமா உங்களுக்கு !   

உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day)

·         அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது.

·      மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க

 

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920)

·         இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார்.

·         இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.

·         1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

·         இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

 

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை(ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897)

·         ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

·         கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். மேலும் படிக்க

செய்திகள்   

கருணாநிதிக்கு ரூ.13.43 கோடி சொத்து: 5 ஆண்டுகளில் 8.50 கோடி உயர்வு  - தி இந்து

தனியார் பள்ளியில் ரூ.3.40 கோடி, தங்க காசுகள் பறிமுதல்- தினமலர்

முதல்வர் பிரசாரக் கூட்டம் திடீர் மாற்றம் -  தினமணி

49-வது பட்டம் வென்று சாதனையை சமன் செய்த நடால்- தினத் தந்தி

உலக ஸ்குவாஷ்: 2-ஆவது சுற்றில் ஜோஷ்னா  - தினமணி

ஐ.பி.எல் T-20 கிரிக்கெட் போட்டி: மும்பை அணி வெற்றி - தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

30/04/2016

6.00 PM Onwards

 

Vasuki Auditorium, Lok Kala Manch

No. 20 Institutional Area, Lodhi Road New Delhi

Chittirai Vizha

6.00 to 7.45

·         Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University)

·         Mr. G. Raghavendra Prasaath- Violin

·         Guru Jayan P. Das - Mridangam

7.50 to 8.40 Award ceremony

Sri Hayagriva &

Lok Kala Manch

 

9811413225

011-24644421

30/04/2016

5.00 PM Onwards

 Delhi Tamil Sangam, Thiruvalluvar Kalai Arangam

 

Sector-V, R K Puram, New Delhi-22

Taala-brahmum

&

Umang - 2016

·         5.00 PM–8.30 PM     -    Starting with Award Program of Senior & Young Musician 2016  of Rudraksham Society

·         Program on Taala Brahmum 2016 & Umang 2016 – Disciples of  'Taalmani'  Shri P. Vetri Boopathy, Pandit Jay Shankar Mishra & Ganesh Shankar Mishra

Rudraksham Society (Primarily on Carnatik) & JM Sangeet Academy (On Hindustani)

R. Muthu Subramanian, V.P. Rudraksham : 9811553220

Abhishek Mishra : 9990550884

 

Click here for Invitation

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment