Sunday, April 3, 2016

04-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

04-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –22(திங்கள்), திருவள்ளுவராண்டு 2046,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 10

பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா

தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற்

செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன்

தெவ்வரை யட்ட களத்து.

விளக்கம்

சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானை, குதிரை, தேர்கள் மீதிருந்து போரிடும் வீரர்களின் கால்கள், கீழிருந்து போரிடும் வீரர்களால் வெட்டப்பெற்றுச் செருப்புகள் இல்லாமல் இரத்த வெள்ளத்துள் வீழ்ந்து கிடக்கும் காட்சி பசியோடிருக்கும் சுறாமீன்கள் கடல் நீரின் மேல் வந்து இரைதேடிப் புரள்வது போல் இருந்தது.

பொருள்

தெவ்வரை – பகைவரை, தொல் – தொன்மையான, புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை - (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்தவரை, கீழோர் - கீழ் நின்ற காலாட்கள், குறுகி சென்ற சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல், கால் - வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன.

தெரியுமா உங்களுக்கு!   

பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897)

·         தமிழ்த் தாய் வணக்கப்  பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் எழுதியவர்.

·         மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.

·         ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.

·         சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

·         கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.

·         மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க

 

பி. ஆர். மாணிக்கம்

·         பி. ஆர். மாணிக்கம் (B.R. Manickam) (ஏப்ரல் 4 1909 - மே 31 - 1964) இவர் தமிழ் நாடு ஆற்காட்டைச் சார்ந்த கட்டடக் கலைஞர்.

·         இவர் பெங்களூர் இல் அரசு பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரின் மேற்பார்வையில் விதான சௌதா கட்டப்பட்டது.மேலும் படிக்க

 

நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள் (International Day for Land Mine Awareness and Assistance in Mine Action)

·         நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புரங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.

·         நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

செய்திகள்   

அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்டத் தேர்தல் - தினமணி

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால் தமிழகத்தில் ... - தினத் தந்தி

'பாரத் மாதா கீ ஜே' சொல்லாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் தி இந்து

உலகிலேயே அதிக விபத்து நடக்கும் நகரங்களில் சென்னைக்கு 2வது ...தினகரன்

மியாமி மாஸ்டர்ஸ்: அசரென்கா சாம்பியன் -  தினமணி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது ... -  தினத் தந்தி

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285

Dwarkalaya's Cultural Program - Call for nominations

Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm

·         Nominations called for from all interested members, junior, senior and very senior, too!

·         Age no bar.

·         You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . .

·         No solo programs!

For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு:

 தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா,   சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya')

For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

9.4.2016

&

10.4.2016

திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம்.

மகளிர் தின போட்டிகள் - 2016

இசை, பேச்சு, கோலம், கவிதை, சமையல் மற்றும் விளையாட்டு போட்டிகள்

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment