Wednesday, April 20, 2016

21-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

21-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

  

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–8(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

கோடை கொண்டாட்டம் !   

அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும்

கோடை கொண்டாட்டம்

வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே!

வாருங்கள் இணைவோம்!!

கோடையை கொண்டாடுவோம்!!!

 

நாள் : 24.04. 2016

தினம் : ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 4 முதல் 8 மணி வரை

இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்),  வைஷாலி.

 

நிகழ்ச்சி நிரல்

·        தமிழ்த் தாய் வாழ்த்து

·        வரவேற்புரை - அவ்வை தமிழ்  சங்கம்

·        நிகழ்சிகள்

1.   யார் இவர், ஊமை விளையாட்டு - உங்கள் பொது அறிவுக்கு ஒரு சவால். ஒரு பிரபல மனிதரை கண்டுபிடிக்கும் உற்சாகம் மிக்க குழு விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.

 

2.   இசை உணவு (Food blast) - இசை நாற்காலி போன்று உணவுகளின் பெயர் கொண்டு விளையாடும் விளையாட்டு.  வயது வரம்பு: அனைவரும்.

 

3.   அன்னையை அறிவோம் - அன்னையைப்பற்றி குழந்தைகளும் கணவரும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்னும் சுவாரசியம் மிக்க விளையாட்டு.வயது வரம்பு: அனைவரும்.

 

4.   தூய தமிழ் பேச்சு போட்டி.- மூன்று நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எவ்வளவு சரளமாக பிழையின்றி தூய தமிழில் பேசுகிறார்கள் எனும் போட்டி.  வயது வரம்பு: அனைவரும்.

 

5.   திருக்குறள் ஒப்பிப்பு போட்டி - குழந்தைகளிடத்தில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஆர்வமும் தாக்கமும் ஏற்படுத்த ஒரு போட்டி. வயது வரம்பு: அனைவரும்.

 

6.   சித்திரப் போட்டி - குழந்தைகளுக்கான பத்து நிமிட சித்திரப்போட்டி.  குறிப்பு: தூரிகை அல்லது வண்ணப்பேனா (sketch pens) குழந்தைகள் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.

 

7.   கழிவுலிருந்து கலை - குழந்தைகளுக்கான, தேவையற்ற பொருட்களிலிருந்து கலை நயமிக்க பொருட்களை பத்து நிமிடங்களில் எவ்வாறு தயாரிக்கலாம் என சிறிய போட்டி. குறிப்பு: வீட்டிலிருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.

 

·        நன்றியுரை - வைஷாலி வாசகர் & விமர்சகர் வட்டம்

களவழி நாற்பது – 22

இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்

ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள்

ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை

கோடுகொ ளொண்மதியை நக்கும்பாம் பொக்குமே

பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்

கூடாரை யட்ட களத்து.

விளக்கம்

சோழன் பகைவர்களை வென்ற களத்தில், புறங்காட்டி ஓடாத வீரர்கள், கூரிய வாளால் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் தலையைக் கொண்ட யானைகளின் துதிக்கைகளை வெட்டினர். அவை (துதிக்கை) தரையில் வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைக்கு அருகே வீழ்ந்து கிடந்தன. அக்காட்சி கதிர்நிறைந்த ஒளிவீசும் நிலவைத் தொட்டுச் சுவைக்கும் பாம்பைப் போன்றிருந்தது.

பொருள்

மதி - சந்திரன் கட்டாரை – பகைவரை.

பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி-இடி போன்ற, முரசின்-முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர் நாடன்- காவிரி நாட்டை யுடையவனாகிய செங்கட்சோழன், கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஒளிறு வாள் - விளங்கும் வாளையேந்திய, ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், வரி நுதல் - வரி பொருந்திய நெற்றியையுடைய, ஆடு இயல் - வெற்றி சேர்ந்த, யானை தடகை - யானையின் நீண்டகைகளை, துணிப்ப துண்டுபடுத்த, துணிந்தவை - துண்டிக்கப்பட்ட அவை, இருநிலம் சேர்ந்த - பெரிய நிலத்தில் விழுந்து கிடக்கும், குடைகீழ்-குடைகளின் அருகே (கிடப்பன).

தெரியுமா உங்களுக்கு !   

வி. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014)

·         சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார்.

·         வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர்.

·         கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர்.

·         எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

·         வாண்டுமாமா சித்திரக் கதைகள் என்பவை வாண்டுமாமா எழுதி வரைந்த வரை கதைகள் ஆகும்.பெரும்பாலான தமிழ் வரைகதைகள் மொழிப் பெயர்ப்புகளாக இருக்கையில், தமிழிலேயே எழுந்த வரைகதைகள் சிலவற்றில் இவை முக்கியமானவை ஆகும். இவை தற்போதும் விற்பனையில் உள்ளன.மேலும் படிக்க


பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)

·         பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம்.

·         தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.

·         இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

·         பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:

o   புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

o   தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

·         பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன. மேலும் படிக்க

 

சர்வதேச வானவியல் தினம்(International Astronomy Day)

·         தொலைநோக்கிமூலம் கிரகங்கள், நிலாக்கள் மற்றும் வான் நிகழ்வுகளையும் அதன் வியப்பையும் அடித்தட்டு மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம்.

·         இது 1973ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

·         ஏப்ரல் 15ஆம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4ஆம் நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

செய்திகள்   

பயங்கரவாதத்தை ஒடுக்கணும்; ஐ.நா.,வில் ஜெட்லி வலியுறுத்தல்- தினமலர்

காசோலை மோசடி வழக்கு: விஜய் மல்லையா குற்றவாளியாக அறிவிப்பு  - தினமணி

பெங்களூருவில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: போலீஸார் குவிப்பு  தி இந்து

சேலத்தில் ஜெ. பொதுக்கூட்டத்தில் 2 பேர் மரணம்: பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கம் தி இந்து

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் நியூயார்க்கில் ஹிலாரி ...-  தினத் தந்தி

மேற்குவங்கத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது ... -  தினகரன்

ஒலிம்பியாவில் இன்று ஒலிம்பிக் தீபம் ஏற்றம் தி இந்து

ரோஹித், போலார்ட் அதிரடி; மும்பைக்கு 2-ஆவது வெற்றி -  தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

24.4.2016

4.00 PM Onwards

 

வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 வைஷாலி.

கோடை கொண்டாட்டம்

அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்

Dr. Valavan

+919312309186

22.4.2016

7.30 AM Onwards

 

Apeejay School Auditorium, Film City, Sector 16A,Noida

Mastakabhishekam  to LordHanuman ji

7:00 am - Pujya Guruji Swami Tejomayanandaji arrives in the Ashram.

7:30 am - Pujya Guruji will perform Abhishekam to the Lord Hanumanji with Panchamritam

 

Chinmaya Mission Noida

chinmayamissionnoida@gmail.com

23.4.2016

6.30 AM Onwards

 

Valluvar Kalai Arangam Auditorium Delhi Tamil Sanagam,

Sector 5, RK Puram, ND

Bharatanatyam Recital by Dr. S. Vasudevan and disciples Varsha & Akshaya

 

 

Delhi Tamil Sanagam

 

30/04/2016

6.00 PM Onwards

 

Vasuki Auditorium, Lok Kala Manch

No. 20 Institutional Area, Lodhi Road New Delhi

Chittirai Vizha

6.00 to 7.45

·         Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University)

·         Mr. G. Raghavendra Prasaath- Violin

·         Guru Jayan P. Das - Mridangam

7.50 to 8.40 Award ceremony

Sri Hayagriva &

Lok Kala Manch

 

9811413225

011-24644421

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment