Wednesday, March 1, 2017

3-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

3-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

   

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி –18 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -29

பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குன்றாமை;

கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;

மண் விழைந்து, வாழ் நாள் மதியாமை;-இம் மூன்றும்

நுண் விழைந்த நூலவர் நோக்கு.

விளக்கம்

தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தலும், வாழ்கின்ற காலத்தை மதிக்காமல் இருத்தலும் கற்றவர்களின் கருத்தாகும்.

பொருள்

பெண் - ஒரு பெண், விழைந்து - விரும்பி, பின் செலினும் - பின் சென்றாலும், தன் செலவில் - தன்னடக்கையில், குன்றாமை - குறையாமையும்; கண் விழைந்து - (தன்) இடந்தேடி, கை உறினும் - வந்து கைப்பட்டாலும், பொருட்கு - (பிறன்) பொருளிடத்தே, காதல் இன்மை - ஆசையில்லாதிருத்தலும், மண் விழைந்து - (மனை முதலிய) நிலத்தை விரும்பி, வாழ்நாள் - (அறப்பயனை யடையாமல்) வாழ்கின்ற காலத்தை, மதியாமை - நல்லதென எண்ணாமையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நுண் - நுட்பமான, நூல் - நூல்களை, விழைந்தவர் - விரும்பிக் கற்றுணர்ந்தவருடைய, நோக்கு - கருத்தாம்;

தெரியமா உங்களுக்கு  !....

ரா. பி. சேதுப்பிள்ளை

·         ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர்.

·         இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.

·         சேதுப்பிள்ளையின் 'தமிழின்பம்' என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார்

·         இரா.பி. சேதுப்பிள்ளையைச் "செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார். மேலும் படிக்க

செய்திகள் 

சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற எந்த விண்ணப்பமும் வரவில்லை  - தி இந்து

முதல்வர், அமைச்சருடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு- தி இந்து    

தனியார் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம் - தினமணி

தொடர்ந்து 8வது முறை சமையல் காஸ் ரூ.86 அதிகரிப்பு -  தினகரன்

குடியேற்ற விதிமுறைகளில் கடுமையைத் தளர்த்தத் தயார்: முதல் ... - தினமணி

உலக சாதனையுடன் தங்கம் அசத்தினார் ஜித்து ராய்தினகரன்

வீடு வாடகைக்கு 

LIG  flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 /  08527498136

Email id:  aruna_clt@yahoo.co.in

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

8.4.2016

&9.4.2016

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment