Sunday, March 12, 2017

13-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

13-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி 29 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -35

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்

நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்

மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர்

மெய்ந்நீர்மை மேனிற் பவர்.

விளக்கம்

கடலின் அலைபோல் எழுந்து தடுமாறாத அறிவுடையவனும், நுட்பமான நூல்களின் முடிவைக் கண்டானும், மனக்கலக்கம் ஒழித்தவனும், ஆகிய இம்மூவரும் அழியாத் தன்மை உடையவராவார்.

பொருள்

முந்நீர் - கடலில், திரை - அலைபோல, எழுந்து (தன்மனம்) எழுந்து, இயங்கா - அலையாத, மேதையும் - அறிவுடையவனும்; நுண் - நுட்பமாகிய, நூல் - சிந்தனையினாலும், பெரும் கேள்வி - மிகுதியாகிய கேள்வியினாலும், நூல்கரை - நூல்களின் முடிவை, கண்டானும் - (ஐயந்திரிபறக்) கண்டவனும்; மைந்நீர்மை - குற்றத் தன்மை, இன்றி (தன்னிடத்தில்) உண்டாகாதபடி, மயல் - மனக்கலக்கம், அறுப்பான் - ஒழித்தவனும்; இம்மூவர் - ஆகிய இம் மூவரும், மெய் நீர்மை - அழிவின்மையாகிய தன்மையுடைய, மேல் - முத்தி உலகத்தில், நிற்பவர் - நிற்பவராவர்;

தெரியமா உங்களுக்கு  !....

கா. நமச்சிவாயம் (பெப்ரவரி 20, 1876 - மார்ச் 13, 1936)

·         தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியர்.

·         1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ., ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன.

·         பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன் என்ற தலைப்புகளில் நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நாடகமஞ்சரி என்ற பெயரில் பத்து நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு, மேடைகளில் அரங்கேறின..மேலும் படிக்க

 

ஜெனரல் குமாரமங்கலம் , (1 சூலை 1913 13 மார்ச் 2000)

·         ஜெனரல் பரமசிவ பிரபாகர் குமாரமங்கலம் அல்லது ஜெனரல் குமாரமங்கலம் (General Paramasiva Prabhakar Kumaramangalam), இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவராக 1967 முதல் 1970 வரை பணியாற்றியவர்.

·         இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947, இந்திய சீனப் போர், மற்றும் 1965இந்திய-பாகிஸ்தான் போர்களில் பங்கெடுத்தவர். பிரித்தானிய இந்தியப் பேரரசின் இராணுவ விருதுகளை பெற்றவர்.

·         இந்திய விடுதலைக்குப்பின் மே 1963இல் கிழக்கு மண்டல படைத்தலைவராகவும், 8 சூன் 1966இல் இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பதவி உயர்வு பெற்றவர். 36 ஆண்டு இராணுவப் பணியாற்றிய குமாரமங்கலம், 7 சூன் 1969இல் பணி ஓய்வு பெற்றார்.

·         1970இல் பத்ம விபூசன் விருது பெற்றார்.மேலும் படிக்க

செய்திகள் 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி: பாஜக ...- தி இந்து

நெடுவாசலில் போராட்டம் இடைக்காலமாக நிறுத்தம்- தினமணி

உத்தரகாண்ட்,உத்தரபிரதேசம்,கோவாவை தொடர்ந்து மணிப்பூரிலும் ...- தினத் தந்தி

2018ல் 4ஜி சேவை பிஎஸ்என்எல் தகவல்தினகரன்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வீரர் அரசு மரியாதையுடன் அடக்கம் -  தி இந்து

கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்- தினமணி

'பணமதிப்பு நீக்க நடவடிக்கை மட்டுமே சீர்திருத்தமாகாது': ஆர்பிஐ முன்னாள் கவர்னர் கருத்து -  தி இந்து

பஞ்சாப் முதல்மந்திரியாக அமரிந்தர் சிங் தேர்வு 16–ந் தேதி பதவி ...-  தினத் தந்தி

இந்தியா வம்சாவளி வக்கீல் நீக்கம் - தினமலர்

சிரியா போரில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: ஐ.நா., - பிபிசி

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

19.3.2017

11.30 AM to

3.00 PM

Ganapathi Pooja Park,  Pocket-6, sector 2, Rohini

Collection camp

Rohini Mahila Sewa samiti

Camp Co-ordination:Goonj

9868793733

7838223267

For Details

 

20.3.2017

to

26.3.2017

7.30 AM to 10.00 PM

Noida Shankar Mutt,  Sector 42, Noida.

SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam

Sri Vishnu Sahasranama Satsangam

Sector 34, Noida

V Badrinarayanan                   9312590372

Suresh Sitaraman                    9811933299

K Rajasekar                             9868102051

V Jayaraman                           9871526767

S Muralidharan                       9811008805

 

8.4.2016

&9.4.2016

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment