Monday, April 24, 2017

25-4--2017 “News Letter” from Avvai Tamil Sangam

25-4--2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை –12(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -58

பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால்

கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத்

துன்னிய சொல்லால் இனம் திரட்டல், - இம் மூன்றும்

மன்னர்க்கு இளையான் தொழில்.

விளக்கம்

முன்னோரோடு பழகியவர்களைக் காப்பதும், சுற்றத்தாரைக் காப்பாற்றுவதும், நல்லினத்தாருடன் நட்பு கொள்வதும் இளவரசன் செய்ய வேண்டியவைகளாகும்.

பொருள்

பழமையை - (நண்பரின்) பழையராகுந் தன்மையை. நோக்கி - பாராட்டி, அளித்தல் - (அவருக்கு வேண்டுவனகொடுத்து) காப்பாற்றுதலும், கேளிர் - சுற்றத்தார், உவப்ப - மகிழும்படி. கிழமையால் - உரிமையால், தழுவுதல் - அணைத்தலும்; கேளிர் ஆய் - உறவினராய், துன்னிய - குழும்படி, சொல்லால் - இன்சொற்களால், இனம் திரட்டல் - நல்லினத்தைக் கூட்டலும்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், மன்னற்கு இளையான் - இளவரசனுடைய, தொழில் - தொழில்களாம்;  

தெரியமா உங்களுக்கு  !....

புதுமைப்பித்தன்

·         புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.

·         கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன.

·         இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.மேலும் படிக்க

ரா. பி. சேதுப்பிள்ளை

·        ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர்.

·         இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.மேலும் படிக்க   

டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917 ஏப்ரல் 25.1989)

·        வ.சுப. மா  தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா. பன்முக ஆற்றல் உடையவர்.

·         மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன.மேலும் படிக்க   

மு. வரதராசன்

·         மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

·        இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

·        பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.மேலும் படிக்க   

வீடு வாடகைக்கு     

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Car Parking space. Free Hold.  Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

2 Bed room flat available on rent in Sector 7,  Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465.   

செய்திகள் 

சத்தீஸ்கர் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 ... - தி இந்து

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ...- தி இந்து

மூலப்பொருள், எரிபொருள் தட்டுப்பாடு: முறுக்கு கம்பி ...தினமலர்

 4 வது நாளாக டெல்லி போலீசார் விசாரணைக்கு டிடிவி தினகரன் ...- தினகரன்

 வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை தடுக்க ...- தினத் தந்தி

பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம் -  தினமலர்

முதல் முறையாக இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா ...-  தினகரன்

'ஏசி' டபுள் டெக்கர் ரயில் இயக்க ரயில்வே திட்டம் - தினமலர்

காஷ்மீரில் மீண்டும் பதற்றம் பிரதமருடன் மெகபூபா அவசர ஆலோசனை -  தினத் தந்தி

101 வயதில் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண் - தினமலர்

புணே த்ரில் வெற்றி; மும்பையின் தொடர் வெற்றிக்கு 'செக்' – தினமணி

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

30.4.2017

Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

43rd year  Samashti Upanayanam

 

Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017.

Indu Samaya Madar Mandram

25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513

 Click Here for invitation

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment