Sunday, April 9, 2017

10-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam

10-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  28 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -48

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த

சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய

கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர்

மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

விளக்கம்

வன்சொல்லை இனிய சொல்லாக கொள்கின்றவனும், நெய் ஊற்றிய சோறு எனக் கூழை மதிக்கின்றவனும், கைக்கின்ற (பழைய, சுவையற்ற) உணவை உண்கின்றவனும் மெய்ப்பொருள் கண்டு வாழ்பவர் ஆவார். பொருள்

வைததனை - ஒருவன் வைததை, இன் சொல் ஆ - இனிய சொல்லாக, கொள்வானும் - கொள்கின்றவனும், நெய்பெய்த - நெய் வார்த்த, சோறு என்று - சோறு இது ஆம் என்று, கூழை மதிப்பானும் - கூழை மதிக்கின்றவனும், கைப்பு அதனை - கைக்கின்ற பொருளை, கட்டி என்று - வெல்லக்கட்டி என்று ஊறிய தன் வாயில் ஊறும்படி, உண்பானும் - உண்கின்றவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், மெய்ப்பொருள் - உண்மையாகிய பரம் பொருளை, கண்டு வாழ்வார் - கண்டு - வாழ்பவர் ஆவார்.;

தெரியமா உங்களுக்கு  !....

மொரார்சி ரன்சோதிசி தேசாய்   

·        மொரார்சி ரன்சோதிசி தேசாய்  (பிறப்பு 29 பிப்ரவரி 1896 - இறப்பு 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.

·        இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே. மேலும் படிக்க 

ஜி. டி. பிர்லா

·         என்றறியப்படும் கன்சியாம் தாசு பிர்லா (Ghanshyam Das Birla- G.D. Birla) (1894 ஏப்ரல் 10 - 1983 சூன் 11) இந்தியத் தொழில்துறையின் முக்கியத் தூண்களில் ஒருவரும், பிர்லா சாம்ராச்சியத்துக்கு அத்திவாரம் இட்டவருமாகவும், மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம விபூசண் (1957-ல்) விருது பெற்றவராகவும் அறியப்படுகிறார்.

·         ஜி.டி.பிர்லா 1916லேயே காந்தியை நேரில் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பு காலப்போக்கில் மெல்ல, மெல்ல நட்பாகவும் தோழமையாகவும் மலர்ந்தது. பிற்காலத்தில், காந்தி எப்போது டெல்லிக்கு வருகை புரிந்தாலும், பிர்லா மாளிகையில் தங்குவதும், பஜனைகள் உள்ளிட்ட தனது காரியங்களை அங்கேயே மேற்கொள்வதும் வாடிக்கை ஆயிற்று.

·         மகாத்மா காந்தி கோட்சேயின் குண்டுக்கு இரையாகி, தனதுயிர் பிரிந்தது பிர்லா மாளிகையில்தான். காந்தி தனது கடைசி 144 நாள்களை இந்த இல்லத்தில்தான் கழித்தார். 1948-ஆம் ஆண்டு சனவரி 30-ம் நாள் காந்தி நம்மைவிட்டுப் பிரிந்தார். அந்தக் கட்டிடம் அமைந்துள்ள சாலையின் பெயர் தீஸ் (30) ஜனவரி மார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.

·         உலகிலேயே ஒரு சாலை ஒரு தேதியின் பெயரில் அழைக்கப்படுவது இதுவாகத்தான் இருக்கும்! . மேலும் படிக்க 

உடன்பிறப்புகள் நாள்

·         உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, அது ஒருங்கிணைப்பில், அடையாளம் காணப்படாமல் உள்ளது. 1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டதையொட்டி. சர்வதேச ரீதியாக, இந்தியாவிலும் ஆத்திரேலியாவிலும் பரவி வருகிறது.  மேலும் படிக்க  

வீடு வாடகைக்கு     

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Car Parking space. Free Hold.  Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

செய்திகள் 

'ஜெயலலிதா அரசு செய்த ஒரே சாதனை கடன் வாங்கியதுதான்; அதிமுக ஆட்சி நீடித்தால் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயரும்' -  தி இந்து

குஜராத் மாநில முதல் பெண் டிஜிபி கீதா ஜோரி! - தினமணி 

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு - தினத் தந்தி

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் உ.பி. எஸ்பிஐ வங்கிக் - தி இந்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை : டி ... - தினகரன்

 சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட 'திடீர்' பள்ளத்தில் பஸ், கார் ... - தினத் தந்தி

கொள்ளையரிடம் வர்த்தக கப்பல் மீட்பு; இந்தியா - சீனா கடற்படை ... - தினமலர்

காஷ்மீரில் தேர்தல் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி -  தினமணி 

லண்டனில் இந்திய பெண் நீதிபதியாக நியமனம் - தினகரன்

ரஷித் கான் அபார பந்துவீச்சு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ... -  தினகரன்

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

30.4.2017

Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

43rd year  Samashti Upanayanam

 

Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017.

Indu Samaya Madar Mandram

25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513

 Click Here for invitation

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment