Monday, March 21, 2016

22-3-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

22-3-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –9(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2046,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 1   

நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர்

வாண்மாய் குருதி களிறுழக்கத்-தாண்மாய்ந்து

முன்பக லெல்லாங் குழம்பாகிப்பின்பகல்

துப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன்

தப்பியா ரட்ட களத்து

பொருள்

சோழன் குற்றங்கள் செய்த பகைவரை வீழ்த்திய போர்க்களத்தில் சூரியன் தோன்றிய இளங்காலையில் பகைவர் மீது வாள் ஆழமாகப் பதிந்தது. அதனால் வழிந்த இரத்தத்தைப் போர்க்கள யானைகளின் கால்கள் கலக்கின. முற்பகலில் குழம்பைப் போன்ற சேறாக மாறியது. பிற்பகலில் வெயில் காய்ந்து யானைகளால் தூளாகிப் பிறகு பவளப் புழுதி போல் எங்கும் பறந்தும், பரவியும் இருக்கும்.

பதவுரை

புனல் நாடான் - நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், தப்பியார் - பிழை செய்தவரை, அட்ட - கொன்ற, களத்து போர்க்களத்தில், நாள் ஞாயிறு - ஞாயிறு தோன்றிய காலைப் பொழுதில், உற்ற - வந்தடைந்த, செருவிற்கு - போரில், வீழ்ந்தவர் - பட்டவருடைய, வாள்மாய் வாளழுந்துதாலலொழுகும், குருதி - உதிரத்தை, களிறு உழக்க யானைகள் கலக்க, தாள் - (அவற்றின்) காலாலே, மாய்ந்து சுருங்கி, முன்பகல் எல்லாம் முற்பகற் பொழுதெல்லாம், குழம்பு ஆகி சேறாகி, பின்பகல் பிற்பகற்பொழுதில், துப்பு துகளில் பவளத் துகள் போல, கெழூஉம் - (விசும்பெங்கும்) பரந்து செறியாநிற்கும்.

தெரியுமா உங்களுக்கு!   

உலக நீர் நாள்( World Water Day )

·         தண்ணீர்தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்றும் ஏதுமில்லை. தண்ணீர் வற்றாத செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது.

·         தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது.

·         1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

·         நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். மேலும் படிக்க

 

உலக தண்ணீர் தினம் (மார்ச் -22) கவிதை

புவியின் பசுமை  பொலிவென ஆக்கிடு
       
புனலைக் காத்திட  புயலாய் புறப்படு
அவிழும் இயற்கையின் ஆடையைத் தடுத்திடு
       
அனலைப் போக்கிட அரும்பணி ஆற்றிடு
குவிந்த கரத்தால் கும்பிட்டு கேட்டிடு
       
கொடிசெடி வைத்து  குவலயம் காத்திடு
தவிக்கும் உயிர்க்கு  தண்ணீர் கொடுத்திடு
       
தரணியில் நீர்வளம் தழைத்திட செய்திடு

நீரியின்றி அமையாது நித்திலம் என்றிடு
       
நீர்த்'துளி எனினும் நேசம் வைத்திடு
பாரினில் நதிகள்  பாய்ந்திட செய்திடு
       
பசுமை மாறா பார்வை கொண்டிடு
தேரினைப் போன்றே  தேசத்தை மாற்றிடு
       
தேனென நீரை  தேக்கியே காத்திடு
காரிருள் பொழியும்  காலம் பார்த்திடு
       
களிக்கும் வகையில்  கணநீர் சேர்த்திடு

நாட்டின் நரம்பென நதிகளை நினைத்திடு
       
நாளும் நீர்வர  தேசீயம் ஆக்கிடு
நீட்டிய கரத்தில்  நேசம் வைத்திடு
       
நீர்வளம் உயிரெனே நாடே உணர்த்திடு
வீட்டில் தண்ணீர்  விரையம் தடுத்திடு
       
வீதியில் பாய்தல் வீணே நிறுத்திடு
ஏட்டின் கருத்தை  எடுத்து இயம்பிடு
       
இன்றே சிக்கனம்  இருக்க செய்திடு

                     -
ப.கண்ணன்சேகர், திமிரி. 9894976159.

செய்திகள்   

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ஷாப்பிங் பைகளில் வாசகம் மூலம் விழிப்புணர்வு -  தி இந்து

 தலித் இடஒதுக்கீடு ரத்து ஆகாது: பிரதமர் மோடி திட்டவட்டம்  தினமணி

 கலால் வரி தொடர்பான நகை வியாபாரிகளின் கோரிக்கையை ...தினத் தந்தி

பல்லடம் நீதிமன்றத்தில் கவுசல்யா ஆஜர்: இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம்  -  தி இந்து

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்வோரிடம் ரூ.10 லட்சம் கோடிக்கு ... - தினகரன்

 ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு! - விகடன்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், அசரென்கா சாம்பியன்  - தினமணி

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு அப்ரிடி நீக்கப்படுவார் ... -  தினத் தந்தி

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

Hindustani Vocal Classes starting from 1st April -2016

  To enrol for batches starting 1st April 2016, interested parents and students may contact:

  NATYA TARANGINI PERFORMING ARTS CENTRE,

  Plot No. 49 & 52,

  Pushp Vihar Sector – 6,

  Saket, New Delhi – 17,

  (Opp. Pushp Vihar Police Station)

   Ph. 011-29565540/ 5245

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.3.2016

4.30 PM to 8.30 PM

Sri Adi Sankara Temple/Sankar Mutt, Sector 42, Noida

VISESHA UPANYASAM/DISCOURSE

4.30 PM to 6.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

6.15 PM to 8.30 PM

"Vedamum adhan Upayogamum/Importance of Vedas"

by Maha Mahabadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanidhi,  Meemamsa Vedantha Sironmani, Veda Sastra Rathnakara Mullaivasal "Brahmashri  R Krishnamurthy Sastrigal"

8.45 PM

Prasada distribution 

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

vssnoida@yahoo.com

27.3.2016

11.00 AM to

3.00 pm

sector 2,  Rohini

Collection camp for GOONJ

Rohini Mahila Sewa Samiti

9868793733, 8527272710.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment