Wednesday, July 19, 2017

19-7-2017 “News Letter” from Avvai Tamil Sangam


Is this mail not displaying correctly? View it in your browser

 

அவ்வைதமிழ்ச்சங்கம்

ஆடி 3, (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள்  மேலான எண்ணங்களை பகிருங்கள்!

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில்.

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது...

".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"

மேலும் படிக்க

 

இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.

 

இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

திரிகடுகம் பாடல் -85

எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி

உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம்.

விளக்கம்

தன் செயல்கள் பகைவருக்குத் தெரியாமலும், நடந்த காரியத்தைக் கேட்டு மறவாதிருத்தலும், அதனைத் தடையின்றி தெளிவாகச் சொல்லும் திறமையும் கொண்டவர்களே சிறந்த வேவுகாரனது குணமாகும்.

பொருள்

(இ-ள்.) எள்ளப்படும் - (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, மரபிற்று ஆகலும் - முறையை உடையதாதலும்; உள் பொருளை - (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தை, கேட்டு மறவாத - கேட்டுப் பின் மறவாத, கூர்மையும் - கூரறிவுடைமையும்; உள் பொருள் - அப் பொருளை, முட்டு இன்றி - தடையின்றி, சொல்லும் உணர்ச்சியும் - (தன் அரசனுக்குச்) சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய - அறிவுள்ள, ஒற்று ஆள் - வேவுகாரனது; குணம் - தன்மையாம்; (எ-று.)

 

(க-ரை.) பகைவன் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் கருதத் தக்கது ஆகாதபடி செய்தலும், அவன் கருத்தறிந்து மறவாதிருத்தலும் அக் கருத்தை அரசர்க்குச் செவ்வையாகத் தெரிவிக்கும் வலிமை பெற்றிருத்தலும், வேவுகாரர்க்குரிய குணங்களாம் என்பது.

 

மரபிற்று : குறிப்பு வினைமுற்று; குறிப்பு வினையாலணையும் பெயருமாம். உள் பொருள் - உண்மையாகிய பொருள் : பண்புத்தொகை - முட்டு - முட்டுதல் : முதனிலைத் தொழிற்பெயர்.

வரலாற்றில் இன்று

·         1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.

·         1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.

·         1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.

·         1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

மேலும் படிக்க

செய்திகள்

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் ... - மாலை மலர்

ஆடி கிருத்திகை விழா: திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் - மாலை மலர்

விவசாயிகள் சாகும் போது எம்.பி.,க்களுக்கு சம்பள உயர்வா?: பார்லி ... - தினமலர்

சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை ... -  இந்து

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் ... - விகடன்

பாகிஸ்தானில் இந்திய டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக்கு ... - தினகரன்

ஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல் - BBC தமிழ்

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி பீச்சர்போன் தயாரிக்கும் இன்டெக்ஸ் - மாலை மலர்

'இன்போசிஸ் தலைவர் பதவியை துறந்ததற்கு வருந்துகிறேன்' - தினமலர்

 

 

REQUIRED SOUTH INDIAN ARTISTS FOR A FEATURE FILM CASTING IN DELHI

A film production team is casting for a feature film in Delhi which requires the characters from South India. The specific age category in which the characters required are between 35 to 45 yrs old. Anyone interested can send their pictures with contact numbers at jogifilm19@gmail.com. If found suitable would be called for an audition. 

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

Thu 20 Jul 2017 10:30 – 11:30

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Group Rendition of Narayaneeyam

Sri Sankatahara Ganapathy Temple

for more details

R.K. Vasan  (R.K.)

 8826655855

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 


 

No comments:

Post a Comment