Thursday, June 8, 2017

09-6-2017 “News Letter” from Avvai Tamil Sangam

09-6-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser


 

 

அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 26, (வெள்ளி ), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில்.

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது...

".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"

மேலும் படிக்க

 

இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.

 

இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

திரிகடுகம் பாடல் -80

முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்

நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்

தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும்

தூற்றின்கண் தூவிய வித்து.          

விளக்கம்

முறையறிந்து செய்யாத தலைவனும், உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய வித்துக்களாகும்.

பொருள்

முறை செய்யான் - முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற - அடைந்த, தலைமையும் - தலைமைத் தன்மையும், நெஞ்சில் - மனத்தில், நிறை இலான் - உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட - மேற்கொண்ட தவமும் - தவமும்; நிறை ஒழுக்கம் - குறைவற்ற ஒழுக்கத்தை, தேற்றாதான் - தெளிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் - பெற்ற அழகும்; இவை மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தூற்றின்கண் - புதலினிடத்து, தூவிய - விதைத்த, வித்து - விதையை யொக்கும்.

தெரியமா உங்களுக்கு  !....

வரலாற்றில் இன்று

·         68 - ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.

·         1934 - வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.

·         1946 - பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.

மேலும் படிக்க

செய்திகள்

ரஜினியை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் ... Oneindia Tamil

45 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவைக் கூட்டம் ... விகடன்

பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?. மாலை மலர்.

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ... மாலை மலர்

மெட்ரோ பணியால் வீட்டுக்குள்ளிருந்து வெளியேறிய சிமென்ட் ... விகடன்

கிரண்பேடி அதிகாரத்தை மீறி செயல்படுகிறார்: நாராயணசாமி திடீர் ... தினமணி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி–நவாஸ் ஷெரீப் ... தினத் தந்தி

மீண்டும் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை… தினமணி
அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது உண்மையே - எப்.பி.ஐ ... மாலை மலர்

பெட்ரோல், டீசல் விலையில் நிலைத்த தன்மையைக் கொண்டுவர ... தி இந்து

வீடு வாடகைக்கு :

3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4).  Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.

 

உலகலாவிய சிறுகதைப் போட்டி!

தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு! சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017

மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள்    tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு:

முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு).

இரண்டாம்  பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு).

மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு).

ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும் 

இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும்.

சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர்  திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234;

மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான  கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569;

சிறுகதைப் போட்டிகளின்  இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி  தொடர்பு எண்:  09488616100.

மேலும் அறிய…

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

09-06-17

7pm

India Habitat Centre, Stein Auditorium, New Delhi.

An evening of Storytelling through Kuchipudi Dance

 

by

 

Yamini Reddy

HCL concerts.

☎ 011 - 29565540 / 2956524

http://www.rajaradhareddy.com/

http://twitter.com/rajaradhareddy

https://www.facebook.com/Rajaradhareddy

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment